Super User / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லமும் சுன்னாகம் லயன்ஸ் கழகமும் இணைந்து நடத்திய வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வுகள் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னோடியாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுன்னாகம் பஸ் நிலையத்தில் இருந்து கண்பார்வையற்ற சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களினால் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
ஊர்வலத்தை சுன்னாகம் பிரதேச சபை செயலாளர் திருமதி சுலோஜனா முருகநேசன் ஆரம்பித்து வைத்தார்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .