Freelancer / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனை கல்வி,கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின் எக்டோ(ECDO)நூலகத்தின் 20வது வருட பூர்த்தியினை முன்னிட்டு 02வது தடவையாக இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

சனிக்கிழமை (21)ஆம் திகதி 452B பள்ளி ஒழுங்கை,கல்முனை-09 யில் அமைந்துள்ள ECDO நூலகத்தில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது. மனித உயிர் காக்கும் இரத்தான முகாமில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு அனைவரையும் ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
இரத்தானம் மேற்கொள்ளவுள்ள போக்குவரத்து சிரமமுள்ளவர்களுக்கு போக்குவரத்திற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, கல்முனை ECDO ஏற்பாட்டுக்குழுவின் தொலைபேசி இலக்கங்களுக்கு 0672225577,0771374236, 0774072412 அழைத்து இரத்த தானம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்
எம். என். எம்.அப்ராஸ்
32 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago