Freelancer / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் மூன்று, நான்கு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்முனை லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.
இதற்காக மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம். ஆபாக் ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பாராட்டும் நிகழ்வு பாடசாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.
கல்முனை வலயத்திற்குட்பட்ட ஐந்து கோட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பத்து பாடசாலைகளிலே இந்த பாடசாலை முதல் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 minute ago
24 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
34 minute ago
37 minute ago