Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 30 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கவிஞர் தாமரைத் தீவானின் “பொன்னகம் மீட்போம்” என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை (28) மாநகர சபையின் நகர மண்டபத்தில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.
நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ச் சங்க பொருளாளரும் கிழக்கு மாகாண நிர்மாணிப்பு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவருமான திரு.வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.பி.எஸ்.எம் சார்ள்ஸ் பிரதம அதிதியாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, ஆர்.துரைரெட்ணம், ஜீ.கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மகுடம் கலை இலக்கிய வட்ட தலைவர் கவிஞர் வி.மைக்கல் கொலின் வரவேற்புரை நிகழ்த்த, நூல் தொடர்பான நயவுரையை முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் கலாபூசணம் எஸ்.எதிர்மன்னசிங்கமும், ' ஈழத்து இலக்கியத்தில் தாமரைத் தீவானின் தடங்கள் ' என்ற தலைப்பில் பேராசிரியர் செ.யோகராசாவும் சிறப்புரை ஆற்றினர்.
24 minute ago
26 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
37 minute ago
45 minute ago