Shanmugan Murugavel / 2024 மே 27 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 100,000ஐக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும், மே மாதத்தில் 120,934 தொடக்கம் 131,112 வரையான இலக்குக்கு பின்னே நிற்கிறது.
இம்மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் அதாவது முதலாம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் 79, 431 பேர் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்தாண்டு மே மாதத்தில் 83,309 பேர் வருகை தந்திருந்தனர்.
கடந்த மாதங்களிலிருந்த நாளொன்றுக்கான சராசரி 5,000இலிருந்து 3,782 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏப்ரலிலிருந்து கோடை காலம் வரையில் நெருக்கடியற்ற காலமாகையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது குறைவாகவே இருக்கும். எவ்வாறெனினும் விசாப் பிரச்சினையும் இம்மாத வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்தே அதிகபட்சமாக 26 சதவீதமானோர் வருகை தந்த நிலையில், இரண்டாமிடத்தில் மாலைதீவுகளிலிருந்து 11 சதவீதமானோர் வருகை தந்துள்ளனர்.
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026