R.Tharaniya / 2025 ஜூலை 13 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கள்ளக்காதல்கள் அட்டகாசங்கள் இந்தியா முழுவதிலுமே பெருகி வரும் சூழ்நிலையில், குடும்ப உறவுகளும் மெல்ல மெல்ல சிதைந்து வருகின்றன.
கள்ளக்காதல் வன்முறைகள் அதிகமாகி கொண்டிருப்பதால், அதுதொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.
ஓயோ ரூம்களை சிலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதாக தொடர்ந்து முறைப்பாடு வந்த நிலையில், விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது.
தற்போது ஓயோ அறைகள் இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது ஓயோ அறைகள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுவதாலும், பாதுகாப்பானது என்ற நம்பிக்கை வருவதாலும், மக்கள் அதிக அளவில் ஓயோ அறைகளை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு ஹோட்டலில் குறிப்பாக ஓயோவில் நீங்கள் பதிவு செய்த ஹோட்டல்களில் பொலிஸார் எந்த வித வாரண்ட்களும் இல்லாமல் வந்து சோதனை செய்ய முடியாது. அது மனித உரிமை மீறல்கள் ஆகும்.
மேலும் உங்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆகி இருந்தால், உங்களை கைதும் செய்ய முடியாது அந்த நினைப்பில் அனைவரும் தவறான செயல்களை செய்கின்றனர்.
இந்தநிலையில் கள்ளக்காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஓயோ ஓட்டலில் திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, அப்பெண்ணின் கணவர் 2 குழந்தைகளுடன் அங்கு வந்துள்ளார். இதனையறிந்த அந்த பெண் அறைகுறை ஆடையுடன் ஹோட்டல் மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
56 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago