2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம்- கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மேற்படி பெண், குவைட்டிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்த நிலையில் விடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடு சென்ற பின்னர் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X