2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நாளை முதல் திங்கள் வரை நாடளாவிய ரீதியில் புதிய கட்டுப்பாடு

Editorial   / 2021 மே 12 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துளார்.

எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.

இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.

முன்னதாக இன்று முதல்  நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த தீர்மானம் மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .