2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மூதூரில் ஐவர் கைது

Janu   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மூதூர் பிரதேச கடல் எல்லைக்குள் செவ்வாய்க்கிழமை  (24) சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க உதவுதல், தமது கடமையை செய்யவிடாது செயற்பட்டமை தொடர்பாக திருகோணமலை கடற்படையினர் மூதூர் பிரதேச ஹபீப் நகரைச்சேர்ந்த ஐவரை கைது செய்துள்ளதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்ப்பட்டவர் பாவித்த படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டு துறைமுகப்பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்  கைது செய்யப்பட்டவர்கள் முப்பது தொடக்கம் நாற்பது வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பட்டப்பட்ட படகையும் ஞாயிற்றுக்கிழமை (24) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர். 

ஏ.எம்.கீத்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .