2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்…

Editorial   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.ஆர்.லெம்பேட்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் விசேட உலங்குவானூர்தி மூலம்   மன்னாருக்கு செவ்வாய்க்கிழமை (24) காலை வருகை தந்தனர்.


மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர்.

 சுவாமி கைலாசநந்த்கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரை  சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

பின்னர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு,ஆலயத்தையும் சுற்றி  குறித்த குழுவினர் பார்வையிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .