Shanmugan Murugavel / 2017 ஜனவரி 10 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரரான நிக் லின்டாலுக்கு, 7 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 35,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டிலேயே, இத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலிய தொடரொன்றில், போட்டியொன்றில் தோல்வியடைவதற்கு, லின்டால் திட்டமிட்டார் என, டென்னிஸ் ஒழுக்கநெறிப் பிரிவு தெரிவித்தது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரன்டன் வோல்க்கின், ஐஸாக் ஃபுறொஸ்ட் ஆகியோர், இவ்விடயத்தில் அபராதத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.
தற்போது 28 வயதான லின்டால், 2013ஆம் ஆண்டிலேயே, தொழில்முறைப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். உயர்ந்தபட்சமாக, 2010இல் தரப்படுத்தலில் 187ஆவது இடத்தை அவர் அடைந்திருந்தார்.
8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago