Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
மத்திய மாகாண விவசாய அமைச்சின் 215 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், மத்திய மாகாணத்தில் கினிகத்தேன, ரம்பொடை, குருந்துவத்தை, அத்தரலியத்த, நாளாந்த, சீகிரியா, கிவிஸ்ஸ ஆகிய இடங்களில் உணவுச்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
ஆரோக்கியமான வாழ்வுக்கு போஷாக்கான உணவு எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்; உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தினூடாக இவ்வுணவுச்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இவை இவ்வருட இறுதிக்குள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.
'இதன்மூலம் நச்சுத் தன்மையற்ற உணவுகளை உற்பத்தி செய்து சுத்தமான போஷாக்கான உணவுகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க முடியும் என' மத்திய மாகாண விவசாய இந்து காலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .