Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒசரி எனப்படும் புடவை முந்தானையைப் பிடிப்பதற்கு மாணவர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கண்டி-கன்னொருவை பிரதேச திருமண நிகழ்வொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதன்படி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினிடி லிவேரா தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் மணப்பெண்ணின் மிக நீளமான ஒசரியைப் பிடிப்பதற்கு குறித்த பிரதேசத்தின் பாடசாலை மாணவர்கள் 250 பேர் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
அலவத்துகொட சரத் ஏக்கநாயக்க கனிஸ்ட வித்தியாலய மாணவர்களே இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன்,இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 கிலோமீற்றர் தூரம் நீளமான குறித்த ஒசரியின் முந்தானையானது கின்னஸ் சாதனைக்காக உருவாக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
1 hours ago