R.Maheshwary / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பல்வேறு போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற 35 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஹட்டன்- நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் செல்பவர்களை கைதுசெய்யும் சோதனை நடவடிக்கை, ஹட்டன் ரயில் நிலையம், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல மற்றும் செனன் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இந்த சோதனை நடவடிக்கைக்கு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் ஸ்டுவட் என்ற மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20- 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களில் போதைப் பொருள்களுடன் பயணித்த 200 பேர் கைதுசெய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களிடம் அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago