Kogilavani / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா, கிக்கிலியம்மான வனப்பகுதியில் இன்று காலை 4 மணிக்கு தீடிரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 10 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிக்கிலியம்மான வனப்பகுதியில் உள்ள அதி வலு கொண்ட மின்சார கம்பி உடைந்து விழுந்ததனால் தீ பரவியிருக்கலாமென பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த வனப்பகுதியின் உச்சி மலையில் அதிக வலு கொண்ட தொலை தொடர்பு கோபுரங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
எனினும் நுவரெலியா பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பினோடு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago