2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சவூதியில் இலங்கைப் பெண் மரணம்; சடலத்தை கொண்டுவர நடவடிக்கை

Kogilavani   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்று, தான் பணிபுரிந்த வீட்டின் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இலங்கைப் பெண்ணான நெல்கா தீபானியின் சடலத்தை, இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.   

மேற்படி பெண்ணின் சடலத்தை கொண்டுவருவதற்காக, ஐந்து இலட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.   

தம்புள்ளையைச் சேர்ந்த மேற்படி பெண், குடும்ப வறுமைக் காரணமாக கடந்த 2011.11.17 ஆம் திகதி, சவூதிக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றார்.   இவரது சேவைக்காலம் இரண்டு வருடங்களுடன் முடிவுற்ற நிலையில், வீட்டின் உரிமையாளர் கேட்டுக்கொண்டதற்கமைவாக மேலும் ஒருவருடத்துக்கு தனது சேவையை நீடித்துக்கொண்டுள்ளார்.   

இந்நிலையில் மூன்று வருடங்கள் கடந்த பின்னரும்கூட வீட்டு உரிமையாளர் தன்னை நாட்டுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்காததால் அப்பெண் கடந்த 2015ஆம் ஆண்டு 10ஆம் திகதி அவ்வீட்டிலிருந்து வெளியேற முயற்சித்து, வீட்டின் மாடியிலிருந்து குதித்துள்ளார்.   

இதனால் காயமடைந்த அப்பெண் சவூதி வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சைப் பெற்றுவந்ததுடன், கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.    இந்நிலையில், அவரது சடலத்தை, இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறு அப்பெண்ணின் மகன், கடந்த மாதம் 14ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்துள்ளார்.   

இவரது சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக, சவூதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு சுமார் 5 இலட்சம் ரூபாயைச் செலுத்துமாறு, வெளிநாட்டு வேலைவாயப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரள அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார். இவரது பணிப்புரைக்கு அமைவாக பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பெண்ணின் சடலத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .