Sudharshini / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கடைத் தொகுதியையும் பஸ் தரிப்பு நிலையத்தையும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (10) திறந்து வைத்தார்.
அம்பகமுவ பிரதேச சபையின் 44 மில்லியன் ரூபாய் செலவில், நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்துடன், 21 கடைத் தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், மத்திய மாகாண இந்து கலாசார மற்றும் தமிழ்க் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள்; தலைவர் தினேஸ், அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026