2025 ஜூன் 28, சனிக்கிழமை

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 21 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை மற்றும் கீனிகம ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் 161/12 ஆவது மைல் கல்லிற்கு அருகில் கற்பாறை சரிந்து விழுந்ததால் மலையகத்துககான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (21​) அதிகாலை குறித்த ரயில் மார்க்கத்தில் பாரிய கல்லொன்று சரிந்து விழுந்தமையால் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த உடரட்ட மெனிக்கே இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று இரவு (20) கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட இரவு தபால் ரயிலானது பண்டாரவளை மட்டுமே பயணித்ததாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 115வது மைல் கட்டைப்பகுதியில் நேற்று இரவு (20) 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.

இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் தரித்து வைக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .