2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

1,50,000 பீடிகள் பறிமுதல்

S. Shivany   / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

ஹெரணை பகுதியில், முறையான அனுமதிப்பத்திரம் இன்றி   தயாரிக்கப்பட்ட  ஒரு தொகை பீடிகளை  கைப்பற்றி, அதனை அழித்துள்ளதாக, கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கனன்வில- ஹொரகஸ் சந்தி பகுதியில் மேற்கொண்ட  சுற்றிவளைப்பின்போது,  1,50,000 பீடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இதன்போது பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 50 வயதுடைய நபரை கைதுசெய்து,  கலால் திணைக்கள உதவி ஆணையாளர் முன்னிலையில்  ஆஜர்படுத்தியதையடுத்து,  அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X