2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2015 ஜனவரி 18 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் வெளியானதை தொடர்ந்து நேர் பெறுமதியை பதிவு செய்த பங்குச்சந்தை, கடந்த வாரம் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. இதில் குறிப்பாக அக்சஸ் என்ஜினியரிங், சிலோன் டொபாக்கோ கம்பனி போன்றவற்றின் மீதூன விலைச்சரிவுகள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. கடந்த வாரம் இரு தினங்கள் விடுமுறை காரணமாக பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாக பங்குச்சந்தை மீது பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோரின் ஆர்வமும் சரிவடைந்திருந்ததாகவும், மீண்டும் அடுத்து வாரங்களில் பங்குச்சந்தை வழமைக்கு திரும்பும் என தாம் எதிர்பார்ப்பதாக பங்குச்சந்தை முகவர்கள் தெரிவித்திருந்தனர். வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,513.86 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4248.03 ஆகவும் பதிவாகியிருந்தன. 

ஜனவரி 12ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,883,944,548 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 25,919 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 23,947 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,972 ஆகவும் பதிவாகியிருந்தன. 

திங்கட்கிழமை
கார்சன் கம்பர்பெட்ச், அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் நெஸ்லே லங்கா ஆகிய பங்குகளின் விலைச்சரிவு காரணமாக சுட்டிகள் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 2.5 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. கொமர்ஷல் வங்கி, டயலொக் ஆக்சியாடா, பான் ஏசியா வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் பான் ஏசியன் பவர் ஆகியவற்றின் மீது மொத்த கைமாறல்கள் பதிவாகியிருந்தன. அக்சஸ் என்ஜினியரிங், யூனியன் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா ஐஓசி, வலிபல் பவர் எரத்னா மற்றும் பிரமல் கிளாஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். 

செவ்வாய்க்கிழமை
அபவிசு மறை பெறுமதியுடனும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு பெறுமதி 1.3 பில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு டயலொக் ஆக்சியாடா, யூனியன் வங்கி மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. மேலும், பிரமல் கிளாஸ், வலிபல் பவர் எரத்னா மற்றும் பீபள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை
சிலோன் டொபாக்கோ கம்பனி, DFCC வங்கி மற்றும் லங்கா ஐஓசி ஆகிய பங்குகளின் மீது விலைச் சரிவுகள் காரணமாக சுட்டிகள் மறைபெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 997 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், சம்பத் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. அக்சஸ் என்ஜினியரிங், லங்கா ஐஓசி மற்றும் யூனியன் வங்கி ஆகிய பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஆர்பிகோ இன்சூரன்ஸ், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா மற்றும் பிரமல் கிளாஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பெருமளவில் பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டு கொள்வனவுகள் மொத்த புரள்வு பெறுமதியில் 52 வீத பங்களிப்பை வழங்கியிருந்தன. இதில் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் போன்ற பங்குகள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிங்ஹபுத்ர ஃபினான்ஸ், சம்சன் இன்டர்நஷனல், ஜெஸ்டெட்னர், ஷலிமர் மற்றும் செவ்ரொன் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 

சிட்ரஸ் லெய்ஷர் (உரிமை), சிலோன் லெதர் (உரிமை), பிரின்ட்கெயார் பிஎல்சி, டெஸ் அக்ரோ (சாதாரண) மற்றும் ஃபோர்ட்ரெஸ் ரிசோர்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 46,800 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 44,400 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.60 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 203.60 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X