2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆயரிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜோன்

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பெரிய வார வாழிபாடுகள் மன்னார் மடு திருத்தலத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அமைச்சர் ஜோன் அமரதுங்க மடு திருத்தலத்தில் தங்கி இருந்து பெரிய வார வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் ஜோன் அமரதூங்க மற்றும் அவரது பாரியார் ஆகியோர் இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .