Freelancer / 2022 மே 14 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறித்த யூரியா உரத் தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், குறித்த உதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நடப்பு நெற்பயிர்ச்செய்கைக்கான மொத்த உரத்தேவை இதனூடாக பூர்த்தி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .