Editorial / 2018 ஜூலை 19 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களை ஒருவர் அடித்து வீழ்த்துவதை விட, உங்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் ஒருவர் சிக்கவைப்பதே, கொடிய பாவமான செயலாகும்.
எவரையாவது வீழ்த்திவிடத் தாக்குதல் நடத்தத் தேவையில்லை என்னும் வித்தையை, வேறுவடிவத்தில் எத்தர்கள் பலர் செயற்படுத்துவதைப் பலர் புரிவதேயில்லை.
மிகவும் அன்பாகக் கரிசனையுடன் நடித்து, எதிரிகளை வலிமையிழக்கச் செய்வதுடன், அவர்கள் மனத்துக்குள் விஷம்போல், தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி விடுவார்கள்.
“உன்னால் இதைச் செய்ய முடியாது”, “நீ இதைச் செய்வது வீண் முயற்சி” என்ற வாறாகச் சொல்லிச்சொல்லி, அவர்களிடம் பயத்தை உருவாக்கி விடுவார்கள். தன்னம்பிக்கை இன்மையே மிகப்பெரிய நோய்தான்.
உண்மையான நண்பர்கள், பெற்றோர்கள் கூட, ஒன்றுமே புரியாமல் சில தவறான முடிவுகளைச் சொல்லுவதுண்டு.
ஆனால், நல்ல விதமாக, இயன்றவரை செய்துமுடிக்கும் ஆற்றலை வளர்க்காமல், முயற்சிகளை முடக்குவது சரியானதுதானா? படிப்படியாக முன்னேற, இயன்றவரை ஊக்கம்கொடுக்க வேண்டும். செய் தொழிலுக்கும் பயிற்சியளிக்க உதவுக; உற்சாக மூட்டுக.
வாழ்வியல் தரிசனம் 19/07/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .