2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 14

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1779: பிரித்தானியாவைச் சேர்ந்த நாடுகாண் கடலோடி ஜேம்ஸ் குக் ஹவாய் தீவில் பழங்குடி இன மக்களால் கொலை செய்யப்பட்டார்.

1849: அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் நொக் போல் புகைப்படம் பிடிக்கப்பட்டார். பதவியிலிருக்கும் போது படம்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியொருவர் புகைப்படம் எடுக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

1876: தொலைபேசிக்கு காப்புரிமை பெறுவதற்கு அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் விண்ணப்பித்தார்.

1879: பொலிவிய துறைமுகத்தை சிலி படைகள் கைப்பற்றியதையடுத்து  'பசுபிக் யுத்தம்' ஆரம்பமாகியது.

1918: கிறகரியன் கலண்டரை சோவியத் யூனியன் பின்பற்றத் தொடங்கியது.

1919: போலந்து – சோவியத் யூனியன் யுத்தம் ஆரம்பம்.

1920: அமெரிக்க பெண் வாக்காளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1924: ஐ.பி.எம். நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

1981: அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 48 பேர் பலி.

1989: இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும்  விதமாக சாத்தானின் வசனங்கள் எனும் நூலை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு  ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயதுல்லா கொமேய்னி மரணதண்டனை விதிக்குமாறு கோரும் 'பத்வாவை' வெளியிட்டார்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X