2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

1990: பனிச்சரிவில் சிக்கி 43 பேர் பலி.

Super User   / 2012 ஜூலை 12 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

1878: ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்திலிருந்து சேர்பியா மொன்டெனெக்ரோ, ருமேனியா முழுமையாக சுதந்திரம் பெற்றன.

1919: பிரித்தானிய வாயுக்கப்பலொன்று பிரிட்டனிலிருந்து அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்து சென்று மீண்டும் பிரிட்டனில் தரையிறங்கியது. முதல்தடவையாக இத்தகைய இருவழிப் பயணம் நடைபெற்றது.

1923: 'ஹொலிவூட்' சமிக்ஞை உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

1973: அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலில் உரையாடல் பதிவுகள் அடங்கிய ஒலிநாடா இருப்பது குறித்து செனட் விசாரணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

1985: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் உப ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்  ஒருநாள் பதில் ஜனாதிபதியாக  கடமையாற்றினார்.

1990: ஆப்கானிஸ்தானில் 'லெனின் சிகரத்தில்'  ஏறிக்கொண்டிருந்த மலையேறிகள் 43 பேர், பூகம்பமொன்றையடுத்து,ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .