2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய வரி தொடர்பில் வெளியான அறிவிப்பு

J.A. George   / 2024 ஜனவரி 29 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ அரசாங்கத்துக்கு எண்ணம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

எனவே, மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது என்றும், பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் இந்த வரி வசூலிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .