2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புதையலுக்காக சிறுவன் நரபலி

Freelancer   / 2023 ஜூலை 25 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதையலுக்கு  ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேரை பொலிஸார்  கைது ​செய்துள்ளனர்.

நாசிக் மாவட்டம் மலேகாவ் தாலுகா போகனே சிவார் கிராமத்தில் தனது பெற்றோருடன் சிறுவன் வசித்து வந்ததுள்ளான்.

மற்ற சிறுவர்களுடன் வீட்டருகே உள்ள மைதானத்தில் கடந்த 16-ந் திகதி விளையாட சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பவில்லை.  பல இடங்களில் தேடியும்  மகனை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்   

 இந் நிலையில் சம்பவத்தன்று சிறுவனை அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் சேர்ந்து கடத்தி சென்றது ​பொலிஸாருக்கு தெரியவந்தது. அந்த 4 பேரையும் பிடித்து  தீவிரமாக  விசாரித்தனர்.  

புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்ததாகவும், அங்குள்ள மைதானத்தில் சிறுவனின் உடலை புதைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு சென்று பாதி புதைந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X