Freelancer / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர்இப்றாஹிம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் ஆண்களுக்கான அனைத்து வயது பிரிவுகளிலும் சம்பியன் பட்டத்தை வென்று மீண்டும் வரலாற்று சாதனையை புரிந்து, கிழக்கின் சதுரங்க ஜம்பவான்கள் எனகல் முனை சாஹிரா தேசிய கல்லூரி மாணவர் மீண்டும் நிரூபித்துள்ளனர் 
திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் சாஹிரா 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 20 வயதுக்குட்பட்ட பிரிவிலும் சம்பியனாகி தேசிய மட்டபோட்டிக்குதெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 
20 வயதுப்பிரிவில் ஐ.எம்.சயான்ஷாஹி, எம்.என்.ஷஹீன்அஹமட், எம்.ஏ.தமீம், எம்.ஏ.ஏ.அதீப், எம்.ஏ.ஏ.அழ்பர், எம்.கே.ஏ.எஸ்.அனாப், ஏ.எம்.சப்கிஆகியோரும், 17 வயதுப்பிரிவில் ஐ.எம். சம்லிஷாஹி, ஏ.எஸ்.ஏ.மிஜ்வாத், எம்.என்.எம்.றீமாஸ், ஐ.கே.எம்.ஆகில்கான், எம்.இஸட்.எம். சனீப், எம்.ஜே.ஐ.சஹ்மி ஆகியோரும் போட்டியில் கலந்து கொண்டனர்.
9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026