Janu / 2026 ஜனவரி 26 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்சியுற்றுள்ளதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை (25) அன்று களுவாஞ்சிகுடியில் ஒன்று சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 21வருடமாக மாவட்டத்தின் பல பகுதிகளில், யுத்த காலத்திலும் கடமையாற்றி தற்போது ஐம்பது வயதைக் கடந்த நிலையில் இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றம் தமக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
திருகோணமலை சென்று வருவதாயின், தாம் பெறும் வேதனம் போக்குவரத்திற்கு மாத்திரம் போதுமானது எனவும் சொத்துக்கடன் மற்றும் ஏனைய கடன்களை பெற்றவர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாவதாகவும் மேலும் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையிலும் பராமரிப்பிலும் பாரிய தாக்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளை சந்தித்து தமது நிலையை தெளிவுப்படுத்தி பொருத்தமான இடத்திற்கு இடமாற்றம் செய்ய கோருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோரை சந்தித்து தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக முறையிடுவதாகவும், மேன்முறையீட்டு சபையின் முடிவுகள் தமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் சட்டரீதியாக நியாயம் கோருவதாகவும் மேலும் மனித உரிமை ஆணைக்குழுவினை நாடுவதாகவும் கருத்துரைத்தனர்.
அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை அணுகி சட்ட ஆலோசனை பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடமும் தமது நிலைமைகள் குறித்து விளக்கமளித்தனர்.

3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago