J.A. George / 2021 ஜூன் 03 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவானதையடுத்து, மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 17 ஆம் திகதி முதல், ஜூன் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த 39 மரணங்கள் சம்பவித்துள்ளன.
19 பெண்கள் மற்றும் 20 ஆண்களின் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம். 30 முதல் 89 வயதுக்கு உட்பட்டவர்களே உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவர் வீட்டில் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் 34 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணித்ததாக கூறப்படுகின்றது.
31 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
5 hours ago
9 hours ago