2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்

Editorial   / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ புதிய சாலையில் உள்ள கோரக் காஸ் சந்திக்கு அருகே வௌ்ளிக்கிழமை (17) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் புஷ்பகுமார ஏகநாயக்க என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் மகள் மற்றும் வேன் ஓட்டுநர் காயமடைந்து உடனடியாக மாரவில அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குப் பின்னர், வென்னப்புவ பொலிஸாரால் மேலதிக விசாரணைக்காக வேன் கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .