2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு

Kogilavani   / 2012 மே 30 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நலன் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மனித உரிமைகள் பிரிவின் ஏற்பாட்டில் எகெட் கரித்தாஸ் நிலையத்தின் மனித உரிமைகள் பிரிவின் இணைப்பாளர் க.சூரியகுமாரியின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 40 பொலிஸ் உத்தியோகத்தரகள்; கலந்துகொண்டார்கள்.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார். திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி களோரினா வளவாளராக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .