2025 ஜூலை 19, சனிக்கிழமை

இன்றுமட்டும் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Editorial   / 2020 மே 28 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 21 பேர் உட்பட, இன்று மட்டும் 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,524 ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய தினத்தில் மாத்திரம் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

21 கடற்படை வீரர்களும், குவைட்டிலிருந்து வருகைதந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 17 பேரும், டுபாயிலிருந்து வருகைதந்து கிரகம தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 17 பேருமாக மொத்தம் 55​ பேர் இன்று இனங்காணப்பட்டுள்ளனர். 

இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X