2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கோலப்போட்டியில்...

Editorial   / 2022 மார்ச் 02 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட 'கோலம் மங்களம் 2022' போட்டியில் மட்டக்களப்பிலிருந்து பங்குபற்றிய செல்வி சிவாதினி வாசுதேவன் மற்றும் செல்வி ஜெகதினி வாசுதேவன் ஆகிய இருவருக்கும் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட இப்போட்டியல் நாடளாவிய ரீதியில் இருந்து 1,000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். முதலாம் சுற்றில் 250 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு 12 போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மிக பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில்  இவர்கள் இருவரும் இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், பணப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X