Editorial / 2022 ஏப்ரல் 23 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு போலவலானை பிரதேச மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (23) காலை ஆர்ப்பாட்டம் நடத்தியதன் பின்னர் நீர்கொழும்பு கல்கத்தை வரையிலும் பேரணியாக வந்தனர்.
அங்கிருந்து நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் வரையிலும் வந்து, பேரணி ஆரம்பிக்கப்பட்ட இடத்துக்கே திரும்பிச் சென்றனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
“அரசாங்கம் பதவி விலக வேண்டும்”, “ஜனாதிபதி வீடு செல்ல வேண்டும்” என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் இவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
(ஷாஜஹான்)


4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago