2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உயர் நீதிமன்ற அறிவுத்தலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எதிர்ப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது வேறு மூத்த கிரிக்கெட் வீரர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தமைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விதிமுறைகளின் பிரகாரம் தலைவர் பதவி விலக நேரிட்டால், உப தலைவர்களில் ஒருவர் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார். சபைக்கான விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை மீறி செயற்பட முடியாது. ஐந்து உபதலைவர்கள் இருக்கின்ற நிலையில் நீதிமன்றம் அறிவித்துள்ளமையை ஏற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முன்னாள் வீரரும் உபதலைவர்களில் ஒருவருமான ஹைதராபாத்தை சேர்ந்த யாதவ் தலைவராக பதவியேற்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகின்றது. இருப்பினும் ஸ்ரீனிவாசன் பதவி விலக வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உடன்பாடாக இருக்கின்றது. 

இதேவேளை இந்திய கிரிக்கெட் கடுப்பாட்டு சபையானது உயர் நீதி மன்றத்திடம், சென்னை சுப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ரோயலஸ் அணிகளை விளையாட அனுமதியளிக்குமாறு கோரவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இரு அணிகளும் விளையாடாதவிடத்து 400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதனால் விசராணைகளை நடாத்துமாறும், அணிகளை விளையாட அனுமதிக்குமாறும் கோரவுள்ளதாக நம்பப்படுகின்றது.

தனக்கு அவ்வாறான வாய்ப்பு வழங்கப்பட்டால் தான் அதை ஏற்றுக்கொள்வேன் எனவும், எந்த சவாலையும் சந்திக்க தயார் எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .