2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்திய தீவுகள் அரை இறுதியில்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலகுவாக வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது. இதன் படி இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது. கடந்த உலக 20-20 தொடரின் இறுதிப் போட்டியில் சந்தித்த அணிகள் இம்முறை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன. 

இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற ரீதியில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் பிராவோ 46 ஓட்டங்களையும், டரின் சமி ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், லென்டி சிம்மொன்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஹபீஸ், சஹிட் அப்ரிடி, சொஹைல் தன்வீர், சுல்பிகார் பாபர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது. மொஹமட் ஹபீஸ் 19 ஓட்டங்களையும், சஹிட் அப்ரிடி, சொஹைப் மக்சூட் ஆகியோர் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் சாமுவேல் பத்ரி, சுனில் நரையன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அன்று ரசல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக டுவைன் பிராவோ தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று குழு 02 இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .