2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மோதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டம்

A.P.Mathan   / 2014 மே 07 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் மோதலில் ஈடுபட்ட மிச்சல் ஸ்டார்க் மற்றும் கெரோன் போலார்ட் ஆகியோர் போட்டி மத்தியஸ்தர் அன்டி பய்கோப்டினால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மிச்சல் ஸ்டார்க் போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதத்தினை தண்டமாகவும், கெரோன் போலார்ட் 75 சதவீதத்தினை தண்டமாகவும் செலுத்தவேண்டும் எனவும் போட்டி மத்தியஸ்தர் அறிவித்துள்ளார்.

வீரரை நோக்கி தாக்கும் முறையில் பந்தை வீசி எறிந்த குற்றச் சாட்டிற்காக மிச்சல் ஸ்டார்க்கும், அப்படியான சம்பவத்துக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டு கிரிக்கெட்டின் கனவான் தன்மையை இல்லாமல் செய்தார் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையிலும் கெரோன் பொலாட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

போட்டி நடுவர்கள் இந்த முறையீட்டினை போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்டு இருந்தனர்.

நேற்றைய போட்டியில் மிச்சல் ஸ்டார்க் வீசிய பந்து கெரோன் பொலார்டின் தலையை தாண்டி போக, மிச்சல் ஸ்டார்க் கேலி கருத்துகளை கெரோன் பொலர்ட் நோக்கி சொல்ல போய் பந்தை வீசும்படி கெரோன் போலார்ட் சமிக்கை காட்டினார். அடுத்த பந்தை வீச மிச்சல் ஸ்டார்க் ஓடி வரும் வேளையில் கெரோன் பொலார்ட் பந்து வீச வேண்டாம் என இடை நிறுத்தி ஆடுகளத்தை விட்டு விலக மிச்சல் ஸ்டார்க் கெரோன் பொலர்ட்டை நோக்கி பந்தை வீசினர். கோவமடைந்த பொலார்ட் அவரை நோக்கி துடுப்பை வீசி எறிந்த போதும் அது அவரின் பக்கத்திலேயே விழுந்தது. இதனை தொடர்ந்து கோவமான கருத்தகளை மிச்சல் ஸ்டார்கை நோக்கி கூற நடுவர்கள் சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .