2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவு கேலிக் கூத்தானது

A.P.Mathan   / 2014 மே 09 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவு கேலிக் கூத்தானது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும், இம்முறை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தவருமான மொஹ்சின் கான் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வைத்து மூன்றிற்கு பூச்சியம் என்று பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வென்றபோது மொஹ்சின் கான் பயிற்றுவிப்பாளராக இருந்தார்.

வக்கார் யூனிஸ், மோசின் கான் ஆகியோரே தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்கள். இருப்பினும் நேர்முகத் தெரிவு நடத்தாமலே மொஹ்சின் கானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. வக்கார் யூனிஸ், கிரிக்கெட் சபையில் உள்ளவர்களினால் உள்ளக சார்போடு பயிற்றுவிப்பாளர் பதவியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என மொஹ்சின் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒரு பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்வதாக இருந்தால் முதலில் குறிப்பிட்ட நபர்களை தெரிவு செய்யவேண்டும். பின்னர் நேர்முகத் தெரிவு நடாத்த வேண்டும். அதன் பின் பதவி வழங்க வேண்டும். ஆனால் இங்கே எதுவம் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனைவரினது கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு கேலித்தனமாக பயிற்றுவிப்பாளர் தெரிவை செய்துள்ளது என மேலும் மொஹ்சின் கான் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .