2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தாழங்குடா பிரதேசத்தில் பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2011 மே 14 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட பிரதி பெலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்நடமாடும் சேவை இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகள் உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், பி.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .