2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. இந்து இளைஞர் பேரவை நடாத்தும் ஆன்மீக போட்டிகள்

Super User   / 2011 மே 14 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 180 அறநெறி பாடசாலை மாணவர்களிடையே பாடசாலை மட்ட ரீதியாகவும், பிரதேச மட்ட ரீதியாகவும் நடாத்திய பேச்சு, கட்டுரை, பண்ணிசை, பூமாலை கட்டல், கோலம் போடல், உடுகு அடித்து காவியம் பாடல், கூட்டு வழிபாடு, ஆன்மீக நாடகம், ஆன்மீக குழு நடனம், பரத நாட்டியம் (தனி, குழு) ஆகிய போட்டிகளில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களை பெற்றவர்களுக்கான மாவட்ட மட்ட இறுதி போட்டி எதிர்வரும் சனி மற்றும் ஞாயி;று ஆகிய தினங்களில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் பங்குபற்றும் அறநெறி  பாடசாலை மாணவர்கள் தவறாது போட்டியில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .