2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பேராயர் கணகசபைக்கு மட்டக்களப்பில் வரவேற்பு

Kogilavani   / 2011 மே 17 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயராக நியமிக்கப்பட்டுள்ள டிலோராஜ் ரஞ்சித் கணகசபையை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.

அங்கிலிக்கன் திருச்சபையின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வரவேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நகரிலிருந்து பேராயர் ஊர்வலமாக அங்கிலிக்கன் தேவாலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு ஆராதனை வைபவம் நடைபெற்றது.

பேராயர் டிலொராஜ் ரஞ்சித் கணகசபை மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .