2026 மே 04, திங்கட்கிழமை

சமுர்த்தி முகாமையாளர்களுக்கான அறிவூட்டல் செயலமர்வு

Kogilavani   / 2012 மார்ச் 18 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களை சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர்களுக்கான அறிவூட்டல் செயலமர்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்;டபத்தில் நடைபெற்றது.

இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழுள்ள சமுர்த்தி வங்கிகளை கணினிமயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இச்செயமலர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பீ.குணரட்னம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் எஸ்.நடேசராஜா, அம்பாரை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் சுதர்சன குணசேகர, அம்பாரை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், மட்டு மாவட்ட இணைப்பாளர் மனோகிதராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .