2026 மே 04, திங்கட்கிழமை

ஆற்றில் தவறி வீழ்ந்து இருவர் பலி

Super User   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர். அனுருத்தன்)

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். கிரான் துறையடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கன்னகிபுரம் வாழைச்சேனையைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை திலிப்குமார் வயது (24) அதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை கேதீஸ் வயது (18) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் வாழைச்சேனை மிறாவோடையிலுள்ள தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் கல்வி பயில்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆறு பேர் கொண்ட குழுவினர் ஆற்றங்கரையோரத்தில்  இருந்த கல் ஒன்றின் மேலே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒருவர் தவறி விழுந்ததையடுத்து அருகருகே இருந்த மேலும் நால்வரும்; தவறி விழுந்துள்ளனர்.
 
இவர்களில் இருவர் உயிரிழந்தனர். ஏனைய மூவரும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரால்காப்பற்றப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாழைச்சேனை மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளன. பொலிஸர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .