2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

உதவி கரம் நீட்டுங்கள்

Sudharshini   / 2015 நவம்பர் 11 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியாகல, பண்டாரவத்தை இல. 01/1ஏ என்ற விலாசத்தில் வசிக்கும் சுமித் சமந்த என்பவரின் ஒரேயொரு மகளான சமந்த பிரியதர்ஷினிக்கு   பிறப்பிலேயே இரண்டு காதுகளும் கேட்காது.

அவருக்கு கொழும்பு வைத்தியசாலையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் காதுகள் இரண்டும் ஓரளவுக்கேனும் கேட்கவேண்டுமாயின் இரண்டு காதுகளுக்கும் மெஷின் பொருத்தவேண்டும் என்று வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த இரண்டு மெஷின்களுக்கும்  237,500 ரூபாய்  செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எமது முயற்சியினால் 110,000 ரூபாயை சேகரித்துள்ளோம். மிகுதி பணத்தை சேகரிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதால் பரோபகாரிகளிடமிருந்து உதவிகளை எதிர்ப்பார்த்துள்ளோம் என்று அவரது தந்தை கேட்டுள்ளார்.

உதவ விரும்புவர்கள் மஹரகம மக்கள் வங்கிக் கிளையில் உள்ள  306200178387601 என்ற கணக்கில்; வைப்பிலிட்டு  0768-517617 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .