Sudharshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹெமட் ஆஸிக்
மாத்தளை நூலகத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொனரவில கெப்பெட்டிபொலவின் உருவச் சிலை, இம்மாதம் 22 ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட உள்ளது.
இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை எதிர்த்து 1818ஆம் ஆண்டு உருவான ஊவ வெல்லஸ்ஸ புரட்சிக்கு மொனரவில் கெப்பெட்டிபொல திஸாவ தலைமை தாங்கினார். அவரது 197ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த உருவச்சிலை திறக்கப்படவுள்ளது.
மாத்தளை மாவட்ட முன்னாள்; நாடாளுமன்ற உறுப்பினர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தும் மாத்தளை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் உதவியுடனும் இச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago