Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
“பிரதான கட்சிகளுக்குள்ளே ஏற்பட்டிருக்கும் பிளவானது, எமது கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது” என்று, சமூக வலுவூட்டல் மற்றும் மலையக உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் பிளவு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது” என்றும், அவர் மேலும் கூறினார்.
பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை, கண்டி மாவட்டச் செயலகத்தில் இன்று (19) தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் மொட்டுக் கட்சியினதும் ஆதரவாளர்கள், அந்தக் கட்சிகளிலிருந்து விலகிச் சென்று வேறுவேறாக போட்டியிடவுள்ளனர். இந்தப் பிளவு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சாதகமானதாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
5 hours ago