Gavitha / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தன்னை வெளியேற்றியமைக்கு, தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன், இதை ஓர் அரசியல் பலிவாங்களாகவே தான் நோக்குவதாகவும் கூறினார்.
இது தொடர்பாக தமிழ்மிரருக்கு இன்று (31) கருத்துத் தெரிவித்த அவர், கட்சியிலுள்ள அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தான் நீக்கப்பட்டதாக தனக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
கட்சியின் தேசிய சபை அங்கத்தவராக தானும் உள்ளதாகவும் மேலும் பலரும் உள்ளனர் என்றும் தெரிவித்த அவர், தேசிய சபை அங்கத்தவர்களை அழைக்காது குழுவொன்றைக் கூட்டி, தான்தோன்றித்தனமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago