2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘தேயிலை விவகாரத்தை உடன் தீர்க்கவும்’

Kogilavani   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கைத் தேயிலைத் தூளுக்கு, ரஷ்யா தடைவிதித்தமை தொடர்பில் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்.   

“இராஜதந்திர அனுபவம் கொண்ட அலுவலர்களை நியமித்து, இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றும் “இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

இந்த விவகாரம் தொடர்பில், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,   

“வர்த்தகம், பொருளாதாரம், வெளிநாட்டு மற்றும் பிறத்துறைகளில் திறமைவாய்ந்த வல்லுநர்கள் உள்ளனர். அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுவோமாயின் இலங்கைத் தேயிலைத் தூள் விவகாரம் தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம்.   

“இலங்கைத் தேயிலையில், பூச்சிகளின் தாக்கம் உள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் உட்பட பலர் அறிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து அறிக்கை விடுத்துக்கொண்டிருந்தால், மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய நாடுகளில், இலங்கைத் தேயிலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கேள்விக்குறியாகிவிடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .