2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

போயா தினத்தில் மதுபானம் விற்றவர் கைது

Kogilavani   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பௌர்னமி தினமான செவ்வாய்க்கிழமை(22), பதுளை தெயியன்னேவெல பிரதேசத்திலுள்ள கடையொன்றில் வைத்து  மதுபானம் விற்றவரை பதுளை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 1560 மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பதுளை, கொஹொவிலவைச் சேர்ந்த 46 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மேற்படி இடத்துக்கு விரைந்த பொலிஸார், 500 மில்லி லீட்டர் மதுபானம் அடங்கிய 1,128 மதுபான போத்தல்களையும் 300 மில்லி லீட்டர் மதுபானம் அடங்கிய 430 மதுபான போத்தல்களையும் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .